articles

அதானி குழுமத்திற்கு எதிராக கட்டுரை வெளியிட்டதால் அச்சுறுத்தல்

புதுதில்லி, நவ. 10 - அதானிக்கு ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதிய விவகாரத்தில், ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையாளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின், க்ளோ நினா கார்னிஷ் ஆகியோரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின் மற்றும் க்ளோ நினா கார்னிஷ் ஆகியோருக்கு, குஜ ராத் காவல்துறை சம்மன் அனுப்பியி ருந்த நிலையில், தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர். கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணை தேதி வரை, அதாவது டிசம்பர் 1 வரை, ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையாளர்கள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேநேரம், பத்திரிகையாளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின் மற்றும் க்ளோ நினா கார்னிஷ் ஆகியோர், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினர்.

‘மறைந்துள்ள அதானி முத லீட்டாளர்களை வெளிப்படுத்தும் ரகசிய ஆவணச் சுவடு’ என்று ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ் கட்டுரை வெளியிட்டி ருந்தது. ஆனால், இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பொய்யா னவை என்று அதானி குழும நிறுவனங்க ளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டா ளர் ஒருவர் புகார் அளித்ததாக கூறப்படு கிறது. அந்த புகாரின் அடிப்படையிலேயே, ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏட்டின் தில்லி நிருபர் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின் மற்றும் அதன் மும்பை நிருபர் க்ளோ நினா கார்னிஷ் ஆகியோருக்கு குஜராத் காவல்துறை சம்மன் அனுப்பி யுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், சம்பந்தப்பட்ட கட்டுரையை எழுதியவர்கள், தற்போது சம்மன் அனுப்பப்பட்ட மனுதாரர்கள் அல்ல என்று கூறினார். மேலும், கடந்த வாரம், இதேபோன்ற (அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை முன்வைத்து) எழுதப்பட்ட கட்டுரைக்காக, குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதில் இருந்து மற்றொரு பத்திரிகையாளர் ரவி நாயர் மற்றும் ஆனந்த் மங்னாலே ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.